தமிழகத்திலும் புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை கொட்டும்: வானிலை மையம்
தமிழகத்திலும் புதுவையிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடர்ந்து பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் சோலையாறு, ஆழியாறு அணைகளின் நீர் மட்டம் நிறைந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணை நிரம்பிவிட்டது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாகவும் மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள காற்று மாறுபாட்டால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய்யும் என்றும் கடந்த 22 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை 41 செ.மீ வரை மழை பெய்ந்துள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மழை நன்கு பெய்து வந்தாலும் தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் போதுமான மழை இல்லாமல் மக்கள் குடிநீருக்கு அல்லாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications