மது விலக்குக்காக போராடிய நாம் தமிழர் கட்சியினரை லோடு லாரியில் ஏற்றி அனுப்பிய போலீசார்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: மதுக்கடைகளை அகற்றக்கோரி, நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து லோடு வண்டியில் ஏற்றிச் சென்றதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள நகரம் என்ற ஊரில், மது கடைகளை அடைக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 18பேரை கைது செய்தனர். இவர்களை கைது செய்த போலீசார் லோடு ஆட்டோவில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இதற்கு அக்கட்சியின் நெல்லை மாவட்ட பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதாபிமானம் இன்றி காவல்துறை நடந்துகொண்டதாக அக்கட்சி குற்றம்சாட்டுகிறது.












Click it and Unblock the Notifications