டாஸ்மாக் மேலாண் இயக்குனராக கிர்லோஷ்குமார் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
சென்னை: டாஸ்மாக் மேலாண் இயக்குனராக இருந்த மகேஸ்வரனுக்கு பதிலாக கிர்லோஷ்குமாரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 134 இடங்களை கைப்பற்றிய அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆறாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில், நேற்று 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் வெளியிட்ட அறிவிப்பில், '' டாஸ்மாக் மேலாண் இயக்குனராக இருந்த சி.என்.மகேஸ்வரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஆர்.கிர்லோஷ்குமார் டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
மேலும், மகேஸ்வரன் கூடுதலாக கவனித்து வந்த, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் பொறுப்பும் கிர்லோஷ்குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications