10 ரூபாய் நாணயத்துடன் வந்த தொழிலாளி.. வாங்க மறுத்த டாஸ்மாக்.. உதவிக்கு ஓடி வந்த போலீஸ்!
10 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக் மதுக்கடையில் வாங்க மறுத்ததால் அந்த பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
நாகர்கோவில்: 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று புரளி கிளம்பி உள்ளதால் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள் மறுத்து வருவதால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் பொதுமக்கள் வங்கிகளுக்கு தொடர்ந்து படை எடுத்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சில்லரை தட்டுபாட்டை போக்க 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஆனால் இந்த 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என புரளி கிளம்பி உள்ளதால் வியாபாரிகள் அதை வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அது சட்டப்படி குற்றம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சம்பவங்கள் பொது மக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கி வருகிறது.

10 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக் மதுக்கடையில் வாங்க மறுத்ததால் அந்த பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்ற ருசிகர சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. நாகர் கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளி இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்றார். தனக்கு விருப்பமான மது பானத்தை கேட்ட அவர் அதற்குரிய பணத்தை 50 நோட்டு ஒன்று மற்றும் ஐந்து 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்தார். ஆனால் கடை ஊழியர் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தார். நாணயங்களுக்கு பதில் ரூபாய் நோட்டுகளை தரும்படி கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி கடை ஊழியருடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் கடைசி வரை நாணயத்தை வாங்க முடியாது என்று டாஸ்மாக் கடை ஊழியர் கறாராக கூறி விட்டார். இதைதொடர்ந்து அந்த தொழிலாளி நேராக 10 ரூபாய் நாணயங்களுடன் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு நடையை கட்டினார். 10 ரூபாய் நாணயத்தால் தனக்கு மது வழங்க மறுத்ததை எடுத்து கூறி நியாயம் வழங்கும்படி போலீசாரிடம் கேட்டார். உடனே காவல் நிலையத்தில் இருந்த ஒரு காவலர் அந்த தொழிலாளியை அழைத்துக்கொண்டு டாஸ்மாக்கடைக்கு சென்றார். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்று எடுத்துக்கூறினார். இதைதொடர்ந்து டாஸ்மாக்கில் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொண்டு அவர் கேட்ட மது பாட்டிலை கொடுத்தனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications