10 ரூபாய் நாணயத்துடன் வந்த தொழிலாளி.. வாங்க மறுத்த டாஸ்மாக்.. உதவிக்கு ஓடி வந்த போலீஸ்!
10 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக் மதுக்கடையில் வாங்க மறுத்ததால் அந்த பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
நாகர்கோவில்: 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று புரளி கிளம்பி உள்ளதால் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள் மறுத்து வருவதால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் பொதுமக்கள் வங்கிகளுக்கு தொடர்ந்து படை எடுத்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சில்லரை தட்டுபாட்டை போக்க 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஆனால் இந்த 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என புரளி கிளம்பி உள்ளதால் வியாபாரிகள் அதை வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அது சட்டப்படி குற்றம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சம்பவங்கள் பொது மக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கி வருகிறது.

10 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக் மதுக்கடையில் வாங்க மறுத்ததால் அந்த பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்ற ருசிகர சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது. நாகர் கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளி இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்றார். தனக்கு விருப்பமான மது பானத்தை கேட்ட அவர் அதற்குரிய பணத்தை 50 நோட்டு ஒன்று மற்றும் ஐந்து 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்தார். ஆனால் கடை ஊழியர் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தார். நாணயங்களுக்கு பதில் ரூபாய் நோட்டுகளை தரும்படி கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி கடை ஊழியருடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் கடைசி வரை நாணயத்தை வாங்க முடியாது என்று டாஸ்மாக் கடை ஊழியர் கறாராக கூறி விட்டார். இதைதொடர்ந்து அந்த தொழிலாளி நேராக 10 ரூபாய் நாணயங்களுடன் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு நடையை கட்டினார். 10 ரூபாய் நாணயத்தால் தனக்கு மது வழங்க மறுத்ததை எடுத்து கூறி நியாயம் வழங்கும்படி போலீசாரிடம் கேட்டார். உடனே காவல் நிலையத்தில் இருந்த ஒரு காவலர் அந்த தொழிலாளியை அழைத்துக்கொண்டு டாஸ்மாக்கடைக்கு சென்றார். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்று எடுத்துக்கூறினார். இதைதொடர்ந்து டாஸ்மாக்கில் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொண்டு அவர் கேட்ட மது பாட்டிலை கொடுத்தனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications