மந்திரியாரே! வெயில் அதிகரித்தும் பீர் விற்பனை உயரவில்லையே – என்ன காரணம்?
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இந்த வருடம் மார்ச் இறுதி வாரத்தில் இருந்தே கடும் வெயில் கொளுத்துகிறது. ஆனாலும், பீர் விற்பனை அதிகரிக்காமல் மந்தமாகவே உள்ளது.
இடையிடையே கோடை மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டி 102 டிகிரி வரை அடிக்கிறது.இதன் காரணமாக இம்மாவட்டத்திலுள்ள நீர்தேக்கங்கள் வறட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மோர், இளநீர், நுங்கு மற்றும் குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். மதுபான பிரியர்களோ டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பீர் வகைகளை வாங்கி அருந்துகிறார்கள்.
இருப்பினும், கடும் வெயில் கொளுத்திய போதிலும் பீர் விற்பனை மந்தமாகவே உள்ளதாக டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.

கடைக்கு வரும் குடிமகன்கள் தங்களுக்கு பிடித்த மது பானங்களையே அதாவது பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுபான வகைகளையே விரும்பி குடிக்கிறார்கள்.
இது பற்றி டாஸ்டாக் அதிகாரி கூறும் போது, ‘‘கடந்த ஆண்டு கோடை வெயில் தொடங்கிய உடனேயே பீர் விற்பனை நன்றாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பீர் விற்பனை குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 சதவீதம் பீர் விற்பனை குறைவாகவே உள்ளது.
இன்னும் ஓரிரு வாரங்களில் பீர் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம், பீர் விற்பனை அதிகரிக்கும் போது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பீர் வகைகள் 1800 பெட்டிகள் வரை விற்பனை ஆகியுள்ளன.தேவைகளுக்கு ஏற்ப போதுமான அளவில் சப்ளை செய்யப்படும்'' என்று கூறினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications