பாஜக தேர்தல் அறிக்கை.. நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை தரும் முக்கியமான ஒரு வாக்குறுதியும் இருக்கு
Recommended Video

சென்னை: நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வருமான வரி விகிதங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலையொட்டி பாஜக இன்று, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, சமஸ்கிருதத்தை இந்தியா முழுமைக்கும் பள்ளிகள் அளவில் பரப்புவது, என்பது உள்ளிட்ட இந்துத்துவா வாக்குறுதிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன.
அதேநேரம், தங்களது வாக்கு வங்கியாக பாஜக நம்பக்கூடிய, நடுத்தர மக்களை ஈர்ப்பதற்காக ஒரு முக்கியமான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் மாற்றம்
அதுபற்றிய ஒரு பார்வை இதோ: சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டில், வரி விகிதங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு பலன்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இதே போன்று மீண்டும் வரி விதிப்புகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாங்கள் உறுதியாக உள்ளோம். இதன்மூலம் அதிகப்படியாக மக்கள் கையில் பணப்புழக்கம் இருக்கும் சூழ்நிலை உருவாக்கப்படும். மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு ஆகும்.

வரிச்சுமை குறைப்பு
எங்களின் திட்டத்தால், நடுத்தர வருவாய் பிரிவினர் மிகுந்த பலன் அடைவார்கள். நடுத்தர வருவாய் பிரிவு மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெற்று, மேலும் சிறப்பான வாழ்க்கையை நடத்துவதற்கு, தேவையான உதவிகளை பாஜக அரசு செய்யும். வரி வசூல் அளவை அதிகரிப்பது, அதேநேரம் வரிச்சுமையை குறைப்பது என்பது தான் பாஜகவின் அடிப்படை நோக்கம்.

உள்கட்டமைப்பு மேம்பாடு
எனவேதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வரி அளவு என்பது 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் இது 10.1 சதவீதமாக இருந்தது. இவ்வாறு ஈட்டப்பட்ட அதிகப்படியான வரி வருவாய் என்பது, ஏழை மக்கள் நலனுக்காகவும், உள்கட்டமைப்புகளை உயர்த்துவதற்காகவும், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு செலவிடப்பட்டுள்ளது.

வரி விலக்கு உச்சவரம்பு
எங்களது கொள்கையை அதே போன்று நாங்கள் தொடருவோம். வரிச்சுமையை குறைப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம், செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications