பாஜக தேர்தல் அறிக்கை.. நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை தரும் முக்கியமான ஒரு வாக்குறுதியும் இருக்கு
Recommended Video

சென்னை: நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வருமான வரி விகிதங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலையொட்டி பாஜக இன்று, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, சமஸ்கிருதத்தை இந்தியா முழுமைக்கும் பள்ளிகள் அளவில் பரப்புவது, என்பது உள்ளிட்ட இந்துத்துவா வாக்குறுதிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன.
அதேநேரம், தங்களது வாக்கு வங்கியாக பாஜக நம்பக்கூடிய, நடுத்தர மக்களை ஈர்ப்பதற்காக ஒரு முக்கியமான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் மாற்றம்
அதுபற்றிய ஒரு பார்வை இதோ: சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டில், வரி விகிதங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு பலன்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இதே போன்று மீண்டும் வரி விதிப்புகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாங்கள் உறுதியாக உள்ளோம். இதன்மூலம் அதிகப்படியாக மக்கள் கையில் பணப்புழக்கம் இருக்கும் சூழ்நிலை உருவாக்கப்படும். மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு ஆகும்.

வரிச்சுமை குறைப்பு
எங்களின் திட்டத்தால், நடுத்தர வருவாய் பிரிவினர் மிகுந்த பலன் அடைவார்கள். நடுத்தர வருவாய் பிரிவு மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெற்று, மேலும் சிறப்பான வாழ்க்கையை நடத்துவதற்கு, தேவையான உதவிகளை பாஜக அரசு செய்யும். வரி வசூல் அளவை அதிகரிப்பது, அதேநேரம் வரிச்சுமையை குறைப்பது என்பது தான் பாஜகவின் அடிப்படை நோக்கம்.

உள்கட்டமைப்பு மேம்பாடு
எனவேதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வரி அளவு என்பது 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் இது 10.1 சதவீதமாக இருந்தது. இவ்வாறு ஈட்டப்பட்ட அதிகப்படியான வரி வருவாய் என்பது, ஏழை மக்கள் நலனுக்காகவும், உள்கட்டமைப்புகளை உயர்த்துவதற்காகவும், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு செலவிடப்பட்டுள்ளது.

வரி விலக்கு உச்சவரம்பு
எங்களது கொள்கையை அதே போன்று நாங்கள் தொடருவோம். வரிச்சுமையை குறைப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம், செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications