பாலியல் தொல்லையால் பிளஸ்டூ மாணவி தற்கொலை... விலங்கியல் ஆசிரியர் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் எழுதி வைத்த கடிதத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரும் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் கவுசல்யா. காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த தேவனூரில் உள்ள பாட்டி அம்மாகண்ணு வீட்டில் தங்கி செய்யூரில் உள்ள தனியார் பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று பள் ளிக்கு புறப்பட்ட அவர் சிறிது நேரத் தில் திடீரென வீட்டில் உள்ள அறை யில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த அறை யில் கவுசல்யா எழுதி வைத்திருந்த 2 பக்க கடிதத்தை உறவினர்கள் கைப்பற்றினர்.

விலங்கியில் ஆசிரியரின் சேஷ்டை:
அதில் பள்ளியில் விலங்கியல் பாடம் நடத்தும் ஆசிரியர் ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாக தனது பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
பைபிள் மீது சத்தியம்:
அதில் கூறி இருப்பதாவது: நான் சொல்வது அனைத்தும் பைபிள் மேல் சத்தியமாக உண்மை. என் சாவுக்கு காரணம் ஆசிரியர் ரமேஷ். அவர் நல்லவர் கிடையாது. அதை எப்படி சொல்வது என்பது தெரியவில்லை. ஆனால் சொல்லித் தான் ஆக வேண்டும். அவர் என்னிடம் தவறாக நடந்தார்.
மற்றவர்களிடம் கேளுங்கள்:
நான் சொல்வதை நம்பவில்லை எனில் நீங்கள் மற்ற மாணவிகளிடம் ஆசிரியர் ரமேஷ் பற்றி கேளுங்கள் என்று அதில் எழுதப்பட்டு இருந்தது.
சடலத்துடன் மக்கள் போராட்டம்:
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கவுசல்யாவின் சடலத்துடன் செய்யூர்-மதுராந்த கம் சாலையில் மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்த செய்யூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை சமரசம் செய்ய முயன்றனர். அதனால் போலீஸார் மற்றும் கிராம மக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
டிஎஸ்பி விசாரணை:
மதுராந்தகம் டி.எஸ்.பி சிவசங்கரன் நேரில் வந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, கவுசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசிரியர் கைது:
இதையடுத்து இதுதொடர்பாக தனி யார் பள்ளி ஆசிரியர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications