ஆசிரியை மீது ஆசிட் வீசிய பள்ளி முதல்வர்... சென்னையில் கொடூரம்
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் ஆசிரியை மீது அவர் பணிபுரியும் பள்ளியின் முதல்வரே ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்பிற்கு ஆளான ஆசிரியையின் பெயர் மஞ்சு சிங் என்பதாகும். இவர் வளசரவாக்கத்தில் உள்ள சியோன் கிட்ஸ் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுக்கச் சென்றார். அப்போது ஆசிரியை மஞ்சு மீது திராவக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திராவகம் வீசியதாக பள்ளி முதல்வர் ஃபுளோரா, அவரது மகள் மற்றும் மகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆசிரியையின் கணவர் பஷீர் அகமது புகாரின் பேரில் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவக வீச்சில் காயமடைந்த ஆசிரியை மஞ்சு சிங் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆசிரியை மஞ்சு சிங் அவர் மீது அந்த பள்ளியின் முதல்வரே திராவகம் வீசியுள்ளார். இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.