நெல்லை: மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ளது கனார்பட்டியில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேலப்பாளையம் அமுதா நகரை சேர்ந்த வில்சன் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் 5;வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தனர்.

அவர்களது பெற்றோர் அவர்களை கண்டித்து பள்ளிக்கு செல்லுமாறு கூறியபோது. அவர்கள் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்று அழுதவாறு கூறியுள்ளனர். அதற்கான காரணம் குறித்து பெற்றோர் விசாரித்த போது, ஆசிரியர் வில்சன் தினமும் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த விபரத்தை ஊர் மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியரை கைது செய்ய கோரி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மற்றும் போலீசார் அங்கு வந்து முறைப்படி புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் பேரில் மானூர் போலீசில் பெற்றோர் புகார் மனு கொடுத்தனர். போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் வில்சனை கைது செய்தனர்.

கைதான வில்சன் விடுமுறை நாட்களில் இயேசு குறித்து சுவிஷேச பணிகள் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+