நெல்லை: மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது
நெல்லை: நெல்லை அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ளது கனார்பட்டியில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேலப்பாளையம் அமுதா நகரை சேர்ந்த வில்சன் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் 5;வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தனர்.
அவர்களது பெற்றோர் அவர்களை கண்டித்து பள்ளிக்கு செல்லுமாறு கூறியபோது. அவர்கள் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்று அழுதவாறு கூறியுள்ளனர். அதற்கான காரணம் குறித்து பெற்றோர் விசாரித்த போது, ஆசிரியர் வில்சன் தினமும் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த விபரத்தை ஊர் மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியரை கைது செய்ய கோரி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மற்றும் போலீசார் அங்கு வந்து முறைப்படி புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் பேரில் மானூர் போலீசில் பெற்றோர் புகார் மனு கொடுத்தனர். போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் வில்சனை கைது செய்தனர்.
கைதான வில்சன் விடுமுறை நாட்களில் இயேசு குறித்து சுவிஷேச பணிகள் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications