நெல்லை: மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது
நெல்லை: நெல்லை அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ளது கனார்பட்டியில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேலப்பாளையம் அமுதா நகரை சேர்ந்த வில்சன் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் 5;வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தனர்.
அவர்களது பெற்றோர் அவர்களை கண்டித்து பள்ளிக்கு செல்லுமாறு கூறியபோது. அவர்கள் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்று அழுதவாறு கூறியுள்ளனர். அதற்கான காரணம் குறித்து பெற்றோர் விசாரித்த போது, ஆசிரியர் வில்சன் தினமும் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த விபரத்தை ஊர் மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியரை கைது செய்ய கோரி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மற்றும் போலீசார் அங்கு வந்து முறைப்படி புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் பேரில் மானூர் போலீசில் பெற்றோர் புகார் மனு கொடுத்தனர். போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் வில்சனை கைது செய்தனர்.
கைதான வில்சன் விடுமுறை நாட்களில் இயேசு குறித்து சுவிஷேச பணிகள் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications