பக்கத்து வீட்டில் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண்ணுடன் ஆசிரியர் ஓட்டம்....!
சேலம்: பக்கத்து வீட்டில் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்ட பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் அந்தப் பெண்ணுடன் ஓடி விட்டார்.
அந்தப் பெண்ணோ கள்ளக்காதல் மோகத்தில் தனது குழந்தைகள் இரண்டையும் அனாதைகளாக்கி விட்டு ஓடி விட்டார். அந்தக் குழந்தைகளை தற்போது போலீஸார் மீட்டு அப்பெண்ணின் மாமனார், மாமியாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சேலம், தம்மம்பட்டி குரும்பர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். 35 வயதான இவரது மனைவி சுகன்யா. ரமேஷ் குமார் ஆசிரியர் ஆவார்.
ரமேஷ் குமார் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அகிலாண்டேஸ்வரி. 26 வயதாகிறது. இவரது கணவர் பெயர் சண்முகம். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அகிலாண்டேஸ்வரி தனது இரு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். குழந்தைகளுக்கு முறையே 4 மற்றும் 2 வயதாகிறது.
அகிலாண்டேஸ்வரியுடன் முதலில் நட்பாக பழகத் தொடங்கியுள்ளார் ரமேஷ் குமார். பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இது சுகன்யாவுக்குத் தெரிய வந்து அவர் கணவரைக் கண்டித்துள்ளார். அவரோ கள்ளக்காதல் முற்றிப் போய் அகிலாண்டேஸ்வரியே கதி என்று சுற்றித் திரி்ந்துள்ளார்.
இந்த நிலையி்ல நேற்று அகிலாண்டேஸ்வரியும், ரமேஷ்குமாரும் தலைமறைவாகி விட்டனர். தனது குழந்தைகள் இரண்டையும் அப்படியே வீட்டில் விட்டு விட்டு ஓடிப் போயுள்ளார் அகிலாண்டேஸ்வரி.
பாவம் அந்த இரு குழந்தைகளும் தாயைக் காணாமல் வீட்டுக்குள் தவித்துக் கொண்டிருந்தன. போலீஸில் புகார் போய் தற்போது போலீஸார் இரண்டு குழந்தைகளையும் மீட்டு மலேசியாவில் இருக்கும் சண்முகத்தின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications