ஈரோட்டில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு.. பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

ஈரோட்டில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணியைப் புறக்கணித்து ஈரோட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி நடத்தினர்.

Teachers are went on Protest at Erode

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய முறைய பின்பற்ற வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையை ஏற்று 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், இதுதொடர்பாக தற்போது கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். 27ம் தேதிக்குள் அரசு எங்களை அழைத்து பேசாவிட்டால், முழுமையாக விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து போராடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+