ஆசிரியர் தினவிழா... காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் கொண்டாட்டம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில் உள்ள இராம.சு. ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி உள்ளூரில் ரொம்பப் பிரபலம். தனியார் பள்ளிகளுக்கு இணையான பாட போதனை, வசதிகள், சுத்தம் என அட்டகாசமாக கலக்கி வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் படிப்பதில் சாதனை புரிகின்றனர். கடுமையான போட்டியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வகையில் காரைக்குடியில் உள்ள இந்த நகராட்சிப் பள்ளி வெப்சைட் எல்லாம் வைத்து அசத்தி வருகிறது.

ஆசிரியர் தினவிழா
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5, ஆசிரியர் தினமாக அனைத்துப் பள்ளிகளிலும் கடைபிடிக்கப் பட்டுவருகிறது. தூய்மையான பாரதம் பற்றி பேச்சு போட்டி நடத்திய ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ரோஜாப்பூக்கள்
காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நினைவுப்பரிசு
ஆண்டுதோறும் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகளை கொடுத்து மகிழ்ந்தனர் மாணவர்கள். மாலையில் காரைக்குடி அழகப்பாபுரம் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு வாழ்த்து
ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் திரு. பீட்டர் ராஜா தலைமையேற்றார். அழகப்பாபுரம் அரிமா சங்கத் தலைவர் திரு. முருகேசன் அனைவரையும் வரவேற்றார். அரிமா சங்க மண்டல தலைவர் திரு .கணேசன், திரு. நிலவழகன்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆசிரியர்களுக்கு பொன்னாடை
அழகப்பா கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சிதம்பரம் ஆசிரியர்களின் சிறப்புக்கள் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியைகள்
அரிமா சங்க பொறுப்பாளர் திரு சுப்பையா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியைகள் சித்ரா, கீதா சுந்தரேஸ்வரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications