திருச்சி, மதுரையிலிருந்து பெங்களூருக்கு தினசரி ரயில்.. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எதிர்பார்ப்பு
திருச்சி: பெங்களூரில் பணிபுரியும், திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள் வசதிக்காக, திருச்சி-பெங்களூர் நடுவே தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள பல சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பணியாற்றுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் சொந்த ஊர் திரும்பும் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு, திங்கள்கிழமை தங்கள் பணிகளுக்கு திரும்புவது வாடிக்கை.

திருச்சி நிலைமை
இதேபோன்றுதான், சென்னை மற்றும் கோவையை சேர்ந்த பலரும், பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு வீக் என்டுகளில் சொந்த ஊர் சென்று திரும்புகின்றனர். ஆனால், அந்த நகரங்கள், பெங்களூரில் இருந்து ரயில் மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் திருச்சி நிலைமைதான் மோசம்.

ஒரு ரயில்
திருச்சியில் இருந்து பெங்களூருக்கு செல்ல, மயிலாடுதுரை-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றே உள்ளது. இந்த ரயிலும் கூட்ட நெரிசலில் சிக்கி திணறுகிறது. இதனால், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், ஆம்னி பஸ்களில் பயணிக்கும் நிலைமை. அதன் கட்டணம் மிக அதிகம். மேலும், ரயிலுடன் ஒப்பிட்டால் ஓய்வெடுக்கும் வசதி மிக குறைவு.

மணப்பாரை வழியாவது
இதனால், பெங்களூர்-திருச்சி இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என்று 'டெக்கிகள்' எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திருச்சி, ராஜ்யசபா உறுப்பினர் என்.சிவா, ஒரு யோசனையை முன்வைத்தார். புதிய ரயிலை இயக்க முடியாவிட்டால், திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக பயணிக்கும் நாகர்கோயில்-பெங்களூர் தினசரி ரயிலை, மணப்பாரை வழியாக செல்ல ஏற்பாடு செய்யுங்கள். திருச்சி பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்பது அந்த யோசனை. ஆனால், அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

ஏன் நின்றது
சில வருடங்கள் முன்பு திருச்சியில் இருந்து அரியலூர், விருத்தாச்சலம், சேலம் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ரயிலில் கூட்டம் அலைமோதியபோதிலும், அந்த ரயில் ஏன் ரத்தானது என்பது ரயில்வே துறைக்கே வெளிச்சம். பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில், கூடுதலாக ரயில்களை நிறுத்த வசதியில்லாததே அந்த நகருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படாமல் இருக்க காரணம் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

மதுரைக்கும் வேண்டும்
திருச்சியை போலவே, மதுரையில் இருந்தும் பெங்களூருக்கு கூடுதல் ரயில் தேவை என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது நாகர்கோயில் மற்றும் தூத்துக்குடியில் இருந்து முறையே பெங்களூர் மற்றும் மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான், மதுரை வழியாக செல்கின்றன. இந்த ரயில்களும் எப்போதும் கூட்டத்தோடே காணப்படுகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications