கோவை வடக்கில் வாக்குகள் பதிவாகாமல் பிரச்சினை.. பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது
சென்னை: தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக வாக்குப் பதிவு அங்கு தாமதமாக தொடங்கியது.
காஞ்சிபுரம், திருக்கால்மேட்டில் வாக்குச் சாவடியில் வாக்கு எந்திரம் பழுது ஏற்பட்டதால் அங்கு வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது. இதேபோல விஜயகாந்த் முன்பு வெற்றி பெற்ற தொகுதியான, விருத்தாச்சலத்தில் உள்ள விஜயமாநகரில் வாக்கு எந்திரம் பழுது ஏற்பட்டது.

நாமக்கல் ஆலம்பாளையத்தில் எந்திரம் பழுது காராணமாக வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. ஆரணியில் ஒரு வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது பிரச்சினை ஏற்பட்டது.
ஊத்தரங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது ஏற்பட்டதால் அங்கு வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டு பின்னர் சரியானது.
சங்கரன்கோவில் தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது ஏற்பட்டது.
கடலூர் கந்தசாமிநாயுடு கல்லூரியிலும் வாக்கு எந்திரம் பழுது ஏற்பட்டதால் தாமதமாக அங்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
ஈரோடு மணியக்காரன்புதூரிலும் வாக்குப் பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டது.
வாக்கு எந்திரங்கள் பழுதான இடங்களில் மாற்று எந்திரங்கள் கைவசம் இருந்ததால் அவற்றைப் பொருத்தி வாக்குப் பதிவு தொடர்ந்து நடக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
திருவாரூர் தொகுதி புதூரில் வாக்கு எந்திரம் பழுதால் வாக்குப் பதிவு தொடங்கவில்லை. அங்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
கோவை வடக்கு தொகுதியில் 147-வது வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பதிவாகவில்லை என்பதால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தற்போது வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள 166 வாக்குச் சாவடி; தூத்துக்குடியில் உள்ள 245வது வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டு தாமதமானது.
ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட கூனவேனல்பட்டி வாக்குச் சாவடியிலும் வாக்கு எந்திரம் பழுது ஏற்பட்டது. நாமக்கல் தொகுதிக்குட்பட்ட சின்னாகவுண்டம்பாளையத்திலும் வாக்கு எந்திரம் பழுது ஏற்பட்டது.
போடியில் ஒரு பிரச்சினை
போடிநாயக்கனூரில் 74வது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி முகவர் முன்னிலையில் திறக்காமல், அதிமுகவினர் முன்னிலையில் திறந்ததாகவும், பத்திரிகையாளர்களையும் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications