"கஸ்தூரி" கிளம்பிருச்சாம்.. பூமாவும், கோதையும் வந்தாச்சு.. பிரணாம்பிகையும் புறப்பட்டாச்சு!
மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கவுள்ள யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்காக பல்வேறு ஊர்களிலிருந்து கோவில் யானைகள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன.
நாளை இந்த முகாம் தொடங்குகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த யானைகள் நலவாழ்வு முகாம் நாளை தொடங்குகிறது.
நாளை தொடங்கி பிப்ரவரி 23ம் தேதி வரை 48 நாட்கள் இந்த முகாம் நடைபெறும். இதில் கோவில் யானைகள் பங்கேற்கின்றன. தமிழக கோவில்கள், மடங்களில் இருந்து 41 யானைகளும், புதுச்சேரி கோவில்களில் இருந்து 2 யானைகளும் பங்கேற்கின்றன.

வாக்கிங் மஸ்ட்
இந்த முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு தினசரி வாக்கிங் கட்டாயமாகும். இதற்காக தனியாக நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் டொண்டட்டாய்ங்..டொண்டட்டாய்ங் என்று அசைந்து அசைந்து தினசரி வாக்கிங் போக வேண்டும்.

குளிக்க மேடை ரெடி
அதேபோல யானைகள் குளிக்க தனியாக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போய் ஜாலியாக குளிக்கலாம். சாப்பிட தனியாக உணவுக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

மருந்தும் தருவாங்க
உடம்புக்கு முடியாமல் யானைகளுக்கு மருந்து தர தயார் நிலையில் ஒரு மருந்தகமும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானைகள் வருகை
முகாமில் கலந்து கொள்வதற்காக கோவில் யானைகள் வர ஆரம்பித்துள்ளன. முதலாவதாக திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் சாமி தேவஸ்தானம் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் யானை திர்க்ருரி வந்து சேர்ந்தது.

பூமாவும்.. கோதையும்
அதேபோலகும்பகோணம் தாலுகா ஒப்பிலியப்பன் வெங்கடாஜலபதி கோவில் யானை பூமாவும், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் யானை கோதையும் வந்து சேர்ந்தன.

பிரணாம்பிகை
அதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசம், திருநள்ளாறு சனீ்ஸ்வரன் கோவிலைச் சேர்ந்த யானை பிரணாம்பிகையும் முகாமுக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

கஸ்தூரி
49 வயதான பழனி கோவில் யானை கஸ்தூரியும் முகாமுக்குப் புறப்பட்டு வருகிறது. அந்த யானையுடன் மருத்துவக் குழுவினரும் வருகிறார்கள்.

முகாகம் 'டாப்பர்' கஸ்தூரிதான்
கடந்த வருடம் நடந்த புத்துணர்வு முகாமின்போது கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல போட்டிகளில் கஸ்தூரி யானை முதல் பரிசை பெற்றது. அதேபோல பல ஊர்களில் இருந்து வந்த யானைகள் மீண்டும் ஊருக்கு செல்ல அடம்பிடித்தபோது கஸ்தூரி அவர்களுடன் லாவகமாக பழகி வழியனுப்பி வைத்தது. இந்த வருடமும் வழக்கமான உற்சாகத்துடன் கஸ்தூரி யானை கிளம்பி வந்து கொண்டிருக்கிறதாம்.
வாங்கம்மா வாங்கம்மா...!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications