கேரளாவில் குண்டு காயங்களுடன் தப்பிய மாவோயிஸ்டுகள் - எல்லைகளில் போலீஸ் சோதனை
செங்கோட்டை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், கேரள அதிரடிப்படை போலீஸாருக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மாவோயிஸ்ட்கள் இருவர் காயமடைந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழக, கேரள, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகளில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவையில் இருந்து கேரள மாநிலம் மன்னார்காடு செல்லும் சாலையில் சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது அமைதி பள்ளத்தாக்கு. இதன் நடுப்பகுதியாக விளங்குவது பழங்குடியினர் கிராமமான கடுகு மண்ணு. இங்கு மாவோயிஸ்ட்கள் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள அதிரடிப் படையினர் ஒரு பிரிவாகவும், அகளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு பிரிவு போலீஸாரும் நேற்று காலை முக்காலி வழியாகவும், அகளி வழியாகவும் சென்று முகாமிட்டனர்.

கடுகு மண்ணுவில் ஒரு பெண் உட்பட 5 மாவோயிஸ்ட்கள் தங்கியி ருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையறிந்த மாவோயிஸ்ட் கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப் படுகிறது. பதிலடியாக கேரள அதிரடிப்படை போலீஸார் 7 ரவுண்டு சுட்டதாகவும், அதில் 2 மாவோயிஸ்ட்கள் குண்டு காயமடைந்து தப்பியோடியதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முதலில் மாவோயிஸ்ட்கள் தான் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதிரடிப்படை போலீஸார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
இந்நிலையில், தேடுதல் வேட்டைக்கு கூடுதல் போலீஸார் அனுப்பப்பட்டுள்ளதாக பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மேரிகுட்டி தெரிவித்தார். இந்த மோதலில் போலீஸார் யாரும் காயமடையவில்லை என்பதை அவர் உறுதி செய்தார்.
இந்நிலையில், காயமடைந்ததாக கூறப்படும் 2 மாவோயிஸ்ட்களை சிகிச்சைக்காக கொண்டு வரக்கூடும் என்பதால் தமிழக எல்லையான மாங்கரை, முள்ளி, ஆனைகட்டி போன்ற இடங்களில் உள்ள சோதனைச் சாவடி களில் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கர்நாடக, ஆந்திர எல்லைகளிலும் அந்தந்த மாநில போலீஸார் உஷார்படுத்தப்பட் டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைபகுதியான புளியரை சோதனைச் சாவடியில் தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications