Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியும் நடக்குமா.. லாரி ஓனரை தலை சுற்ற வைத்த ராஜபாளையம் போலீஸின் அபராதம்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் கனரக லாரிக்கு ராஜபாளையத்தில் ஓவர்லோடு என அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழப்பாவூர் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வரும் விவேகானந்தர், தனது லாரி ஆலங்குளம் பகுதியில் மட்டுமே பயிற்சிக்கு பயன்படுத்தப்படுவதாகவும், ராஜபாளையம் சென்றதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் தனது வாகனத்திற்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

tenkasi rajapalayam traffic police

இதுகுறித்து விவேகானந்தர் தென்காசி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஜிபிஎஸ் மேப் கேமராவில் தனது லாரி கீழப்பாவூரில் நின்றிருந்ததற்கான ஆதாரத்தை போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவேகானந்தர், போக்குவரத்து போலீசாரின் அலட்சியம் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஓட்டுநர் பயிற்சி லாரிக்கு ராஜபாளையத்தில் ஓவர்லோடு என அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர் தென்காசி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் கோரியுள்ளார்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+