Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் அடித்ததில் தென்காசி டிரைவர் உயிரிழந்த வழக்கு.. வீடியோவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின் போது வேன் டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் காண்பித்த வீடியோ பதிவுகளை பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடையும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடக்குபுதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் முருகன் ( வயது 37). டிரைவரான இவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று, அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களை சங்கரன்கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக வேனில் அழைத்துச் சென்றுள்ளார்.

Tenkasi Van driver dies after assualt by police judge shock after seeing the video footage

சங்கரன்கோவில் நகரப் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தில் மோதி முருகன் ஓட்டி வந்த வேன் லேசான விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, போலீசார் ஓட்டுநர் முருகனை தாக்கியதாகவும் அதில், முருகன் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தாக்குதல் நடத்திய போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "என் கணவர் முருகன் கடந்த 8 -ம் தேதி சிவராத்திரியையொட்டி கோயிலுக்கு செல்ல அச்சம்பட்டியை சேர்ந்த சில பெண்களை வேனில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார். அப்போது, ராஜபாளையம் ரோட்டில் முன்னால் சென்ற ஆட்டோ மீது வேன் லேசாக மோதியது. இது தொடர்பாக விசாரித்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், வண்டியை விட்டு கீழே இறங்கமாட்டாயா எனக்கூறி எனது கணவரை ஷூ அணிந்த கால்களால் மிதித்தனர்.

இதில் மயக்கம் அடைந்த எனது கணவர் கீழே விழுந்தார். உடனடியாக போலீசாரே வேனை ஓட்டி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். எனது கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததுவிட்டதாக கூறினர். போலீஸ் காவலில் மரணமடைந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. எனது கணவர் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.

எங்களுக்கு இழப்பீடு, அரசுப் பணி உள்ளிட்டவை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரணை செய்தார். அப்போது அரசு தரப்பில், சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் காவலில் மரணம் நிகழவில்லை. பொது இடத்தில் சம்பவம் நடந்துள்ளது.

முருகனின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ளது. பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையை மனுதாரருக்கு வழங்கியுள்ளோம். அறிக்கை குறித்து ஆட்சேபனை எழுப்பவில்லை. சிபிசிஐடி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று கூறினர். அப்போது போலீஸ் தரப்பில் காண்பிக்கப்பட்ட வீடியோ பாதிவுகளை பார்த்த நீதிபதி, கடும் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+