விடுதலை சிறுத்தை - பா.ஜக. மோதல்: முத்துப்பேட்டையில் போலீஸ் குவிப்பு
திருவாரூர்: முன்விரோதம் காரணமாக பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக முத்துப்பேட்டையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கல்ராஜ்(30) பா.ஜ.க பிரமுகரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரான வினோத்(25) என்பருக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் மைக்கல்ராஜ் நேற்று முன்தினம் மாலை ரேசன் கடைக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வினோத் தனது வீட்டிலிருந்து தனது பைக்கை சாலைக்கு கொண்டு வரும்பொழுது மைக்கல்ராஜிம், வினோத்தும் எதிர் பாராவிதமாக மோதிக்கொண்டனர்.
அப்பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வினோத் ஆத்திரம் அடைந்து மைக்கல்ராஜை கத்தியால் குத்தியுள்ளார். இதில் மைக்கல்ராஜ்க்கு கையில் காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததம் பா.ஜ.கவினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் கூடி ஒருத்தருக்கு ஒருத்தர் மோதிக்கொண்டனர். இதனால் பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதில் விடுதலை கட்சியை சேர்ந்த வினோத், லட்சுமனன், சிவலிங்கம், மன்மதராஜ், குமார், செல்வம், மேகலா, ராஜா, பிரவின், காளிதாஸ், ராஜேந்திரன் உட்பட 11 பேர் காயமடைந்தனர். அதேபோல பா.ஜ.கவை சேர்ந்த மைக்கேல்ராஜ், செல்லதுரை, கவுதமன், குமார், வடிவழகன், வேலாயுதம், முரளி, சிவா, தேவேந்திரன் உட்பட 9பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த 20 பேரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு உள்ளார். ஓவரூர் கிராமத்தில் இதனால் பதட்டம் ஏற்பட்டதால் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. கணபதி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications