சென்னை-கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸில் சோலார் பேனல் சோதனை
சென்னை: பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ரயிலின் மேல்புறத்தில் சோலார் பேனல் பொருத்தும் திட்டத்திற்காக சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸை தேர்வு செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ரயிலின் மேல்புறத்தில் சோலார் பேனலை பொருத்துவது குறித்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் ஷீலா ராமசேஷா மற்றும் பேராசிரியர் ஜே. சீனிவாசன் தலைமையிலான ஆய்வு மாணவர்கள் புதன்கிழமை காலை சென்னை வந்து சதாப்தி ரயிலில் ஏறி அதில் சோலார் பேனல் பொருத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.

முன்னோட்டமாக சதாப்தி எக்ஸ்பிரஸில் 180 வாட் சக்தி கொண்ட இரண்டு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட ஒரு சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டாக்டர் ஷீலா கூறுகையில்,
ரயில்களில் சோலார் பேனல் பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 90 ஆயிரம் லிட்டர் டீசலை சேமிக்கலாம் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளோம். ஓடும் ரயிலில் சோலார் பேனல் மூலம் எவ்வளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம் என்றார்.
சதாப்தி எக்ஸ்பிரஸ் அதிவேத்தில் செல்வதுடன் சில இடங்களில் மட்டுமே நிற்கும் என்பதால் அதில் சோலார் பேனலை பொருத்தியுள்ளனர். அதில் தயாராகும் மின்சாரத்தின் அளவை குறிக்க ரயிலில் ஆய்வாளர்கள் ஷ்ராவந்த் வசிஸ்ட் மற்றும் வசிஷ்தா அதிமனே ஆகியோர் பயணம் செய்தனர்.












Click it and Unblock the Notifications