சு.சுவாமியுடன் திடீர் சந்திப்பு- அரசியலே பேசவில்லையாம்- அடித்து சொல்லும் தா. பாண்டியன்!
பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமியை தா. பாண்டியன் கோவையில் திடீரென சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது அரசியல் பேசவில்லை என தா. பாண்டியன் கூறியுள்ளார்.
கோவை: பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமியை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் திராவிடர் இயக்க கொள்கை பிரகடன நூற்றாண்டு நிறைவு விழாவில் தா.பாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் திடீரென கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்தியசாலைக்கு தா. பாண்டியன் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் உடல் நலம் குறித்து தா. பாண்டியன் விசாரித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய தா. பாண்டியன், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது எனக்கும் காயம் ஏற்பட்டது. இதற்காக கோவை ஆர்ய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
நான் இங்கு வந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியும் சிகிச்சை பெறுவதாக கேள்விபட்டேன். அவரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். நாங்கள் அரசியல் எதுவுமே பேசவில்லை என்றார்.