2016ம் ஆண்டில் “அம்மா” பிரதமராக வேண்டும்- தம்பிதுரை ஆவேச பேச்சு!
கரூர்: தமிழக முதல்வராக மட்டுமில்லாமல் ஜெயலலிதா நாட்டிற்கே பிரதமராக வேண்டும் என்று தம்பிதுரை கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.கவின் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கூட்டத்தில் கலந்துகொண்ட லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசும்போது, "நமது முதல்வர் ஆட்சியில் இல்லாத போது கூட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார்.
வரும், 2016 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுவது மட்டுமின்றி, வரும், 2019 இல் நடக்கும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க வெற்றி பெற்று, அம்மா பிரதமராக வேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றாலும், அம்மாவுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கைகூடவில்லை. சென்னை இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது, பொருட்சேதம் ஏற்பட்டதே தவிர, அம்மாவின் கடுமையான நடவடிக்கையால் மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications