ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாருக்கு ஆதரவு ஏன்? அதிமுக கூட்டணி எம்எல்ஏ தமீமுன் அன்சாரி விளக்கம்
சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீராகுமாருக்கு ஆதரவளிக்க உள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்ஏ தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமீமுன் அன்சாரி. அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ள நிலையில் தமீமுன் அன்சாரி தன்னிச்சையாக இம்முடிவை எடுத்துள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினை இன்று மதியம் சந்தித்து பேசினார் தமீமுன் அன்சாரி. அவருடன் அதிமுக கூட்டணியிலுள்ள சிறு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களான தனியரசு, கருணாசும் ஸ்டாலினை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு பேரறிவாளவன் விவகாரம் தொடர்பானது என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சந்திப்பு நடந்த சில நிமிடங்களிலேயே, மீராகுமாருக்கு ஆதரவளிப்பதாக மீண்டும் தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளார். மீராகுமாருக்குத்தான் திமுகவும் ஆதரவளிப்பது குறிப்பித்தக்கது. நேற்றே தமீமுன் அன்சாரி தரப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தலித் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருப்பதால் மீரா குமாருக்கு தனது ஆதரவை அளிக்க உள்ளதாக தமீமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications