முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை! இனியும் தாமதம் வேண்டாம்! அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!
சென்னை: முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் இனியும் தாமதம் கூடாது என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ஈத் பெருநாள் சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

மேலும், அப்போது அவர் கூறியதாவது;
அன்பையும், கருணையையும் முன்னிறுத்தும் இப்பெருநாளில் தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோளை முன் வைக்கிறோம். 20 ஆண்டுகளை கடந்த அனைத்து ஆயுள் கைதிகளையும் சாதி, மத, வழக்கு பாராமல் முன் விடுதலை செய்யுங்கள். இதை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வேண்டுகிறோம்.
சமூக வழக்கு தொடர்பான 37 முஸ்லிம் கைதிகள் மற்றும் Rss சார்புடைய 4 கைதிகளையும் இதில் விடுதலை செய்யுங்கள். இப்பிரச்சனையை கருணையுடன் அணுகுங்கள்.

அவர்கள் குற்றவாளிகளா? அப்பாவிகளா? என்ற விவாதத்திற்குள் நாங்கள் வரவில்லை. 20 வருடங்களை தாண்டி, பலர் 25 வருடங்களையும் கடந்து சிறையில் வாடுகிறார்கள். இதற்கு மேலும் அவர்கள் தண்டணையை அனுபவிக்க வேண்டுமா?
எனவே இனியும் இவர்களது விடுதலையை தாமதிக்க கூடாது. தமிழக முதல்வர் அவர்கள் கருணையுடன் இவ்விஷயத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். விரைவில் தமிழக அரசிடமிருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications