கட்டுக்கடங்காமல் தெறித்து ஓடும் தாமிரபரணி ஆறு.. உச்சநீர்மட்டத்தை நெருங்கும் பெருஞ்சாணி அணை!
தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Recommended Video

கன்னியாகுமரி : கட்டுக்கடங்காமல் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு தெறித்து ஓடுவதால், அந்த பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பாதுகாப்பான இடங்களுக்கும் செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இது முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்டது ஆகும். இம்மாவட்டத்தின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஜீவாதாரமாக இன்றுவரை இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பெருஞ்சாணி அணையும் வேக வேகமாக நிரம்பி தொடங்கியது. இந்த அணையின் மொத்த கொள்ளவே 77 அடி ஆகும். ஆனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நீர்மட்டம் 75 அடியை தாண்டி நிரம்பி வருகிறது.
இதனால் முழு கொள்ளளவை மிக விரைவில் எட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அணையிலிருந்து 200 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்துவிட்டதால் பரளி ஆறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடுகிறது. பொதுவாக இந்த அணையின் நீர்மட்டம் 71 அடியை தொட்டதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.
அதன்படி 75 அடியை எட்டிவிட்டதால், பரளி ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த ஆறுகள், திருவட்டார், சிதறால், திக்குறிச்சி, குழித்துறை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை நோக்கி பாய்ந்துதான் செல்ல வேண்டியுள்ளது. எனவே பெருஞ்சாணி அணையின் தண்ணீர் ஓடும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications