வைரவிழாவில் நிதீஷ் இந்தியில பேசினா ஏன் திமுகவினர் கை தட்டுகிறார்கள்.. தமிழிசை புத்திசாலிக் கேள்வி
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவிற்கு வந்த நிதீஷ் குமார் இந்தியில் பேசினால் திமுகவினர் ஏன் கை தட்டுகிறார்கள் என்று தமிழசை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும் என்று கோரி சென்னை சேப்பாக்கத்தில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தமிழிசை பேசியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூடும் வரை பாஜக போராட்டத்தை நடத்தும்.
பெண்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள். தமிழக முதல்வர் உடனே இந்த பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும்.
மூடப்பட்ட கடைகள் எத்தனை?
சட்டசபைக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்ற கணக்கை முதல்வர் வெளியிட வேண்டும்.
மறுவாழ்வு மையங்கள்
டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக அரசு மருத்துவமனைகளில் உடனடியாக மறுவாழ்வு மையங்களை திறக்க வேண்டும். தமிழகம் தள்ளாடி கொண்டிருக்கிறது. படித்து பழக வேண்டியவர்கள் குடித்து பழகுகிறார்கள்.
இந்தி எதிர்ப்பு
திமுக இந்தியை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொண்ட நிதீஷ் குமார் இந்தியில் பேசினார். அவருடைய பேச்சிற்கு ஏன் திமுகவினர் கைத்தட்டினார்கள் என்று தமிழிசை பேசினார்.
கொடும்பாவி எரிப்பு
இந்தப் போராட்டத்தில் டாஸ்மாக் கொடும்பாவியை ஊர்வலமாக எடுத்துச் சென்று பாஜகவினர் எரித்தனர். இந்தப் போராட்டத்தில் தேசிய பொது செயளாலர் முரளிதரராவ், துணை தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.