தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்- தங்கதமிழ் செல்வன்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.
ஆண்டிப்பட்டி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.
முதல்வருக்கு எதிராக நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 18 எம்எல்ஏக்கள் புகார் மனு அளித்தனர். இதையடுத்து அவர்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்ததால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

டிடிவி கூறினார்
இதுகுறித்து ஆண்டிப்பட்டியில் தங்கதமிழ் செல்வன் கூறுகையில் நாங்களும் சட்டசபையில் சென்று இருக்க வேண்டும். தவறான வழிகாட்டுதலால் தாங்கள் தனித்து விடப்பட்டோம். தனித்தனியாக முடிவெடுத்துக் கொள்ளுமாறு டிடிவி கூறிவிட்டார்.

நியாயமான முடிவு
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எந்த திட்டமும் வந்து சேரவில்லை. நம்பிக்கை துரோக ஆட்சியில் எப்போதும் சேரமாட்டேன். அரடை எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீது கட்சித் தாவல் சட்டம் பாயவில்லை. 3-ஆவது நீதிமன்றம் அமைத்தாலும் நியாயமான தீர்ப்பு கிடைக்காது.

வழக்கை வாபஸ் பெற
மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றங்கள் கேலிக்கூத்தாகிவிட்டது. எடப்பாடியிடம் அமைச்சர் பதவி வாங்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எம்எல்ஏ வேண்டும் என்பதற்காக வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்.

கட்டாயம் ஏற்பட்டுவிட்டது
மக்கள்தான் உண்மையான எஜமானர்கள். எடப்பாடி ஆட்சியின் அவலத்தை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். 18 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும். 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications