பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - வீடியோ
தஞ்சாவூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பல லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சையில் வேதராமன் என்பவரது வீட்டில் மர்மநபர்கள் புகுந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூரில், வில்லியவாரம்பாள் பகுதியைச் சேர்ந்த வேதராமன், தன் வீட்டை பூட்டிவிட்டு ஊருக்குச் சென்று திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதனையடுத்து, அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications