இன்று வங்கிகளுக்கு விடுமுறை: பணம் இல்லாமல் அல்லாடிய மக்கள்
சென்னை: இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். அதன் பிறகு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

மோடியின் அறிவிப்பு வெளியானதில் இருந்து வங்கிகள் விடுமுறை இன்றி வார இறுதி நாட்களில் கூட செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கிகள் செயல்பட்டபோதும் கூட அங்கு போதிய அளவுக்கு பணம் இல்லாததால் மக்களால் பழைய நோட்டுகளை மாற்ற முடியவில்லை. நேற்று முன்தினம் பழைய நோட்டுகளை மாற்றும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
நேற்று முதியவர்களுக்கு மட்டுமே வங்கிகளில் புதிய நோட்டுகள் வழங்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மக்களால் பழைய நோட்டுகளை மாற்ற முடியவில்லை.
இந்நிலையில் இன்று வங்கிகள் செயல்படும் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என மக்கள் நினைத்தனர். ஆனால் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஏடிஎம் மையங்களில் பல செயல்படவில்லை. செயல்படும் ஏடிஎம் மையங்களில் எந்த நேரம் பார்த்தாலும் நீண்ட வரிசை இருப்பதால் செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள்.











Click it and Unblock the Notifications