அதிமுகவிற்கு வியத்தகு வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு நன்றி - ஜெயலலிதா
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு வியத்தகு வெற்றியை பெற்று தந்த மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு வியத்தகு வெற்றியை பெற்று தந்துள்ளனர்.
மக்களின் இந்த இணையில்லா அன்பிற்கும் பேராதவிற்கும் நன்றி சொல்ல வர்த்தைகள் இல்லை. அதிமுகவின் மகத்தான வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற கொள்கையில் வாழ்ந்து வருகிறேன். எம்.ஜி.ஆரை போன்று தொடர் வெற்றியை அளித்த மக்களுக்கு எனது தலைமையிலான புதிய அரசு அரும்பணிகளை தொய்வின்றி ஆற்றும். வெற்றி பெற்ற, வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.