ஈராக்கில் சிக்கித் தவித்த 46 நர்ஸுகளை பத்திரமாக மீட்டதற்கு நன்றி: மோடிக்கு விஜயகாந்த் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் சிக்கித் தவித்த 46 இந்திய செவிலியர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

Thanks for saving the lives of 46 nurses: Vijayakanth writes to Modi

ஈராக் நாட்டில் திக்ரித் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய செவிலியர்கள் 46 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் வருபவர்களின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பதறிக் கொண்டிருந்தனர்.

அந்த வேளையில், அவர்களை பத்திரமாக மீட்டுத்தரும் பொருட்டு அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, கடத்தப்பட்டிருந்த செவிலியர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தும், சிறிதும் கால தாமதமின்றி அவர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து இந்தியா வந்து சேருவதற்கு தேவையான போக்குவரத்து மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தந்த தங்களுக்கும், தங்கள் தலைமையிலான மத்திய அரசிற்கும் தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+