திருப்பூரில் வாகன சோதனையில் பிடிபட்ட ரூ570 கோடி வங்கிப் பணம்...
கோவை: திருப்பூர் அருகே வாகன சோதனையில் பிடிபட்ட ரூ 570 கோடி பணம் பாரத ஸ்டேட் வங்கியின் விசாகப்பட்டினம் கிளைக்குச் செல்ல வேண்டியது என்றும், உரிய ஆவணங்கள் கொடுத்த பிறகும் விட மறுப்பதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்துடன் 3 கண்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தனர். அந்த கண்டெய்னர்களில், 570 கோடி ரூபாய் இருந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் கொடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ரூ 195 கோடி ரூபாய் இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இரவு 1 மணிக்கு 3 கண்டெய்னர் லாரிகளும், அதற்கு முன்னும் பின்னும் 3 இன்னோவா கார்களும் என மொத்தம் 6 வாகனங்கள் அடுத்தடுத்து வந்துள்ளன.
சந்தேகப்பட்ட பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி விசாரித்தபோது, கண்டெய்னர்கள் முழுக்க பணம் இருப்பதாகவும், அந்த பணம் கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கண்டெய்னர் வாகனங்களிலும், இன்னோவா கார்களிலும் தலா ஒரு ஆந்திர மாநில போலீசாரும் இருந்துள்ளனர். ஆனால் அந்த போலீசார், காவல்துறையின் யூனிபார்ம் அணிந்திருக்கவில்லை. ஆந்திரா மாநில எல்லைக்குச் சென்ற பின் யூனிபார்ம் அணிந்து கொள்ள முடிவு செய்திருந்தார்களாம்.
இந்த விவரங்கள் அனைத்தும் சொன்ன பிறகும், 3 கண்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் பறக்கும் படையினர்.
இந்த கண்டெய்னர் லாரிகளில் மொத்தம் 570 கோடி ரூபாய் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில், 195 கோடி ரூபாய் இருப்பதாக தேர்தல் ஆணையர் லக்கானி தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் இந்த பண பரிமாற்றம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கன்டெய்னர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கண்டெய்னர் லாரிகளுடன் வந்த ஆந்திர போலீசார் கூறுகையில், "விசாகப்பட்டினம் வங்கிக்கு கொண்டு செல்லும் பணத்தைத்தான் அதிகாரிகள் பிடித்துள்ளனர். உரிய ஆவணங்கள் இருந்தும் பணத்தைவிட அவர்கள் மறுக்கின்றனர். மேலும், வங்கி அதிகாரிகள் வந்து இதனை உறுதிப்படுத்திய பின் தான் விடுவோம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்," என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications