இறைச்சிக்காக மாடுகளை விற்க ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை தடையில்லை.. ஹைகோர்ட் கிளை அறிவிப்பு!
இறைச்சிக்காக மாடுகளை விற்க ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை தடையில்லை என ஹைகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவு மீதான தடை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக்கூடாது என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் மத்திய அரசின் தடையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றின. இந்நிலையில் மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடையை எதிர்த்து வழக்கறிஞர் செல்வகோமதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

மீண்டும் விசாரணை
அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மாட்டிறைச்சி விவகாரத்தில் திருத்தம்
அப்போது மாட்டிறைச்சி விவகாரத்தில் திருத்தங்களை கொண்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். திருத்தங்கள் கொண்டு வரப்படும் வரை தடையை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இடைக்கால தடை நீட்டிப்பு
இதையடுத்து இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவு மீதான தடை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வரும் 22ஆம் தேதி வரை காநடைகளை விற்க தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications