விருத்தாச்சலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லை.. மாணவி மரணம்.. உறவினர்கள் மறியல்
சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பள்ளி மாணவி உயிரிழந்தார்.
விருத்தாச்சலம்: பள்ளியில் மயங்கி விழுந்த மாணவிக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருத்தாசலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன், இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி, கம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை மகாலட்சுமி வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார்.

அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் அளித்துவிட்டு, மகாலட்சுமியை அருகிலுள்ள கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு அனுமதித்தது.
ஆனால் மகாலட்சுமிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் யாரும் அந்த சமயத்தில் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவி மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாமலும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததாலும்தான் மாணவி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் உறவினர்களுடன் பொதுமக்களும் இணைந்து, விருத்தாசலம் சேத்தியாத்தோப்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications