பெரிய கன்டெய்னர் லாரி... உள்ளே பார்த்தால் 640 குக்கர்கள்.... தேர்தல் அதிகாரிகள் ஷாக்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அருகே கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.3 லட்சம் மதிப்புள்ள 640 குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Recommended Video
இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.42 லட்சம் வரை உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கன்டெய்னர் லாரியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 640 குக்கர்கள் இருப்பது தெரியவந்தது.

இந்த குக்கர்கள் அனைத்தும் திருவையாறு பகுதிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த குக்கர்களை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் தஞ்சாவூர் தாலுகா அலுவலகத்திற்கு அதனை கொண்டு சென்றனர். அந்த குக்கர்களுக்கு உரிய போதிய ஆவணங்கள் இருந்தாலும் உரிய விசாரணைக்கு பிறகே குக்கர்கள் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.42 லட்சம் வரை உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications