சட்டசபை தேர்தல்: வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

The Electronic Voting Machines ready for assembly election

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1562 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவிற்காக பயன்படுத்தப்படும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ரேண்டம் முறையில் ஓதுக்கீடு செய்யப்பட்டு 6 தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த மின்னனு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வேட்பாளர் பெயர், சின்னம் உள்ளிட்ட விபரங்கள் பொருத்தப்பட்டன.

தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள மையத்தில் தூத்துக்குடி தொகுதியில் உள்ள 274 மையங்களுக்கான ஓட்டு இயந்திரங்களில் வேட்பாளர் விபரங்கள் பொருத்தப்பட்டன. மாவட்ட தேர்தல் அதிகாரி ரவிக்குமார் தலைமையில் இந்த பணி இரவு வரை நடந்தது.

இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மே 15ம் தேதி மதியம் முதல் வாக்கு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதுவரை வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+