பூவரசம் பூ பூத்தாச்சு.. செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் சேவை.. இன்று முதல் கூ கூ!
செங்கோட்டை-கொல்லம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Recommended Video

செங்கோட்டை: செங்கோட்டை-கொல்லம் இடையே இன்று முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மீட்டர் கேஜ் பாதையில் தொடர் வண்டி இயக்கப்பட்டு வந்தது. இந்த பாதையை அகல பாதையாக மாற்ற கடந்த 2010-ஆம் ஆண்டு தொடர்வண்டி சேவை நிறுத்தப்பட்டு அகல பாதை பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் 8 ஆண்டு நடைபெற்று வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த வழித்தடத்தில் வாரம் இருமுறை தாம்பரம் - கொல்லம் விரைவு தொடர் வண்டி இயக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செங்கோட்டை - கொல்லம் இடையிலான பயணிகள் தொடர்வண்டி சேவை தொடங்கியது. முதல் நாளான இன்று செங்கோட்டையில் இருந்து சேவை தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் சேவை தொடங்கியது. இதனால் இரு மாநில எல்லையில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த ரயிலானது, செங்கோட்டையிலிருந்து காலை 11.25க்கு புறப்பட்டு மாலை 3.40க்கும் கொல்லம் வந்து சேரும் என்றும், கொல்லத்திலிருந்து காலை 10.30-க்கு புறப்படும் ரயில் பகல் 2.35க்கு செங்கோட்டைக்கு வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியதால் செங்கோட்டை வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ரயிலை இயக்கிய ஓட்டுனர்களுக்கும் மற்றும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து கோயமுத்தூருக்கும், திருப்பூருக்கும், பகல் நேரத்தில் தொடர் வண்டியை இயக்க வேண்டும். அதிகமான அதிவிரைவு தொடர்வண்டிகளை இந்த பகுதியில் இருந்து இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications