கிலோ ரூ. 600 விற்ற நெய் மீன், இப்போ ரூ. 200தான்... மக்களுக்கு ஜாலி.. மீனவர்களுக்கே கவலை
ராமேஸ்வரம்: அதிக ருசி கொண்ட மீன்களில் ஒன்றான நெய் மீன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட நெய் மீன், தற்போது ரூ.200க்கு விற்கப்படுவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகளில் செல்லும் மீனவர்கள் வலையில் விளை, கிளி, முரல், கிளாத்தி, திருக்கை, பாறை, சீலா மீன் உள்ளிட்ட மீன்கள் கிடைக்கும்.

இந்த மீன்களிலேயே அதிக ருசி கொண்டது சீலா மீன். அதிக முள் இல்லாமல் மெதுவாக இருக்கும் இந்த மீன், குழந்தைகளுக்கும் அதிகம் கொடுக்கப்படுகிறது. இந்த மீன், நெய் மீன் என்றும் குறிப்பிடப்படுகிறது.
அதிக ருசி கொண்ட மீன் என்பதால் எப்போதும் விலையும் அதிகமாகவே இருக்கும். கடந்த மாதம் கிலோ ரூ. 600 வரை விற்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பாம்பன் பகுதியில் சீலா மீன்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது கிலோ ரூ.200க்கு சீலா மீன்கள் விற்கப்படுகின்றன.
இந்த அதிரடி விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது இந்த மீன்கள் நாகப்பட்டினம், கோடியக்கரை, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பல ஊர் களிலும் அதிகம் கிடைக்கின்றன. எனவே தமிழகம் முழுவதும் இந்த மீன் கிடைப்பதால் வெளியூர்களுக்கு அனுப்பப்படாமல் பாம்பனில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications