டோல்கேட்களில் தொடரும் சண்டை சச்சரவு, வாக்குவாதம்... மெத்தனத்தில் நெடுஞ்சாலை ஆணையம்
Recommended Video
சென்னை: சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை கொண்டுவரப்பட்டது முதல் வாகன ஓட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே நாள்தோறும் சண்டை சச்சரவும், வாக்குவாதமும் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பாஸ்டேக் ஸ்கேனர்கள் கோளாறு காரணமாக இரண்டுமுறை பணம் செலுத்த வேண்டிய அவலம் ஏற்படுவதால் வாகன உரிமையாளர்கள் மத்தியில் பாஸ்டேக் முறைக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
முதலில் பாஸ்டேக் முறையை வரவேற்ற லாரி உரிமையாளர்கள் கூட இப்போது அதில் இருக்கும் குழப்பங்களை பார்த்து வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

சுங்கச்சாவடி
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நாள் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் டோல்கேட்களில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் பாஸ்டேக் முறையில் பணம் பிடித்தம் செய்யும் மின்னணு முறையை நெடுஞ்சாலை துறை ஆணையம் கொண்டு வந்துள்ளது.

தகராறு
இந்த பாஸ்டேக் முறையில் தொடரும் குழப்பங்களால் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல், பாஸ்டேக் ஸ்கேனர் கருவி கோளாறு தான். இதை கவனத்தில் கொண்டு அதை சீர்செய்ய வேண்டிய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மெத்தனத்தில் உள்ளது.

வலியுறுத்தல்
மீண்டும் கட்டண முறையையே டோல்கேட்களில் தொடர வேண்டும் அல்லது பாஸ்டேக் பொருத்தாத வாகனங்களுக்கு அபராதத் தொகை ஏதுமின்றி சாதாரண கட்டணத்தை பெற வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

நீதிமன்றம்
இதனிடையே சுங்கச்சாவடிகளில் நிலவும் குழப்பங்களை களைய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்திடம் குட்டு வாங்குவதற்கு முன்பே தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தனது தூக்கத்தை கலைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications