ஜல்லிக்கட்டு விசாரணைக்கு கால அவகாசம் தேவை : நீதிபதி ராஜேஸ்வரன்
மதுரை: ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பான விசாரணை முடிய ஓராண்டு ஆகும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான்காவது முறையாக ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக விசாரணையை தான் நடத்தி உள்ளதாக கூறினார்.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 1951 பேரில் 1002 பேர் சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராஜேஸ்வரன், சம்மன் கொடுத்தும் வாராதவர்கள் போலீஸ் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றார்.
குறுக்கு விசாரணை செய்வதால் அதிகமாக கால அவகாசம் தேவைப்படுவதாகவும், இது தொடர்பாக இன்னும் 800 பேரை விசாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்தியாளர்களிடம் வீடியோ பதிவு எதுவும் இருந்தால் தங்களிடம் பகிர்ந்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று ராஜேஸ்வரன் கேட்டுக்காண்டார்.












Click it and Unblock the Notifications