"பெண் ஆட்டை" கடித்து குதறி.. மரத்தில் தொங்கவிட்டு போன பயங்கரம்.. மலையடிவாரத்தில் ஒரே பரபரப்பு
ஆடு ஒன்றை கடித்து மரத்தில் தொங்க விட்டு போயுள்ளது சிறுத்தை
தென்காசி: சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆடு ஒன்றை அடித்து கொன்று, மரத்தில் தொங்க விட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சியில் மலையில் சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன.
இந்த மலையடிவாரத்தில் கிராமங்களுக்குள் மக்கள் வசித்து வருகின்றனர்.. ஆனால், வனவிலங்குகள் அடிக்கடி, கிராமத்திற்குள் புகுந்துவிடுவதுடன், கால்நடைகள், பயிர்களுக்கு சேதப்படுத்தி விடுகிறது..

வாழ்வாதாரம்
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், ஒருவித அச்ச உணர்வுடன் வாழ வேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளனர்.. அந்த வகையில், கடையம் அருகே கடனாநதி அடிவார பகுதியில் பெத்தான் பிள்ளை என்ற குடியிருப்பு பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் பட்டு...

பட்டு விவசாயி
இவர் ஆடு மேய்த்து விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்றைய தினம் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வீடு திரும்பினார். அப்போதுதான், ஒரு பெண் ஆடு காணாமல் போனது தெரியவந்தது.. அதனால், பதறி போன பட்டு, அந்த ஆடுவை தேட ஆரம்பித்தார்.. எங்குமே கிடைக்கவில்லை..

காணாமல் போன ஆடு
இந்நிலையில், இன்று காலை மறுபடியும் ஆடு எங்கே இருக்கிறது என்று தேட ஆரம்பித்தார்.. அப்போதுதான், மலையடிவாரப் பகுதிகளில், ஒரு மரத்தில் ஆடு இறந்து தொங்கி கொண்டு கிடப்பதை கண்டார்.. அது தன்னுடைய காணாமல் போன பெண் ஆடு என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்... வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்..

மரத்தில் ஆடு
சிறுத்தை ஒன்று, ஆட்டை அடித்து மரத்தில் எடுத்து வைத்து கொண்டு, கடித்து தின்றுள்ளது.. மிச்ச ஆட்டையும் மரத்திலேயே தொங்க விட்டு போனது தெரியவந்தது.. அந்த சிறுத்தை பக்கத்தில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து வந்துள்ளது தெரியவந்தது.. எனவே, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஆய்வு செய்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications