ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 5 அறங்காவலர்களை நியமித்தது தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 5 அறங்காவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு அறங்காவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று நடக்கவுள்ள இவர்களின் முதல் கூட்டத்தில் அறங்காவலர்கள் குழுத்தலைவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.

 The newly appointed trustees for srirangam temple

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அறங்காவலர்களாக வேணு சீனிவாசன், ரங்காச்சாரி, டாக்டர் கே.என்.சீனிவாசன், கவிதா, வெங்கடேச உத்தமநம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு இவர்கள் அறங்காவலர்கள் பொறுப்பில் இருப்பார்கள். வரும் 23ம் தேதி இவர்களின் முதல் கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் முறைப்படி அறங்காவலர் குழுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இதில் சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி, ஓராண்டு மட்டும் பொறுப்பில் இருப்பார். இவர் தனது பதவிக்காலத்தில், சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலராகவும் இருப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+