வாக்கு எண்ணிக்கையின் போது பழுது ஏற்பட்டால், அடுத்து என்ன?- ராஜேஷ் லக்கானி தகவல்!
வாக்கு எண்ணிக்கையின் போது கட்டுப்பாட்டு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அச்சான சின்னங்கள் எண்ணப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது கட்டுப்பாட்டு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அச்சான சின்னங்கள் எண்ணப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்குப் பின் நேற்று முன் தினம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 77.5 சதவீத வாக்குகள் பதிவானது.
வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைதியாக நடந்தது
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.கே.நகர் தேர்தல், எவ்வித அசம்பாவிதமும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்றார்.

அதிகபட்சமாக 90.19%
மொத்தம், 77.5 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் இருந்த, 19வது ஓட்டுச்சாவடியில், அதிகபட்சமாக, 90.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

குறைந்தபட்சமாக...
குறைந்தபட்சமாக, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள, 130வது ஓட்டுச் சாவடியில், 60.2 சதவீத ஓட்டுகளே பதிவாகின. கொருக்குப்பேட்டையில், இரவு, ஏழே முக்கால் வரை ஓட்டுப்பதிவு நடந்தது என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

பழுது ஏற்பட்டால்..
வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது கட்டுப்பாட்டு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் பழுது நீக்கும் இயந்திரத்தை வைத்து, சரி செய்வது வழக்கம் என்றார். ஆனால் இம்முறை அதற்கு பதிலாக துண்டு சீட்டில், அச்சான சின்னங்களை எண்ண, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications