வாக்கு எண்ணிக்கையின் போது பழுது ஏற்பட்டால், அடுத்து என்ன?- ராஜேஷ் லக்கானி தகவல்!
வாக்கு எண்ணிக்கையின் போது கட்டுப்பாட்டு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அச்சான சின்னங்கள் எண்ணப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது கட்டுப்பாட்டு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அச்சான சின்னங்கள் எண்ணப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்குப் பின் நேற்று முன் தினம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 77.5 சதவீத வாக்குகள் பதிவானது.
வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைதியாக நடந்தது
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.கே.நகர் தேர்தல், எவ்வித அசம்பாவிதமும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்றார்.

அதிகபட்சமாக 90.19%
மொத்தம், 77.5 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் இருந்த, 19வது ஓட்டுச்சாவடியில், அதிகபட்சமாக, 90.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

குறைந்தபட்சமாக...
குறைந்தபட்சமாக, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள, 130வது ஓட்டுச் சாவடியில், 60.2 சதவீத ஓட்டுகளே பதிவாகின. கொருக்குப்பேட்டையில், இரவு, ஏழே முக்கால் வரை ஓட்டுப்பதிவு நடந்தது என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

பழுது ஏற்பட்டால்..
வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது கட்டுப்பாட்டு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் பழுது நீக்கும் இயந்திரத்தை வைத்து, சரி செய்வது வழக்கம் என்றார். ஆனால் இம்முறை அதற்கு பதிலாக துண்டு சீட்டில், அச்சான சின்னங்களை எண்ண, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications