பழனி நவபாஷாண சிலை மாற்றம் செய்யப்படாது.. அறநிலையத்துறை சென்னை ஹைகோர்ட்டில் விளக்கம்
பழனி முருகன் கோயிலிலுள்ள நவபாஷாண சிலை மாற்றம் செய்யப்படாது என்று இந்து சமய அறநிலையத்துறை சென்னை ஹைகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது.
பழனி: பழனி முருகன் கோயிலிலுள்ள நவபாஷாண சிலை மாற்றம் செய்யப்படாது என்று இந்து சமய அறநிலையத்துறை சென்னை ஹைகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு அபிஷேகம் செய்யும் போதும், அலங்காரம் செய்யும் போதும் சிறிய அளவில் சிலைகள் சேதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் இந்த சிலையில் சேதம் ஏற்பட கூடாது என்று புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது.
இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி ஐம்பொன் சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதை பற்றிய வழக்கு தனியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் என்பவர் வேறு ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி நவபாஷாண சிலையை பரிசோதித்து பார்க்க குழு அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து இருந்தார். அதில் சேதம் இருக்கிறதா சென்று சோதிக்க வேண்டு என்று கோரிக்கை வைத்து இருந்தார்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை தற்போது விளக்கமும் அளித்துள்ளது. அதன்படி பழனி கோயிலிலுள்ள நவபாஷாண சிலை மாற்றம் செய்யப்படும் எண்ணம் இல்லை. அந்த சிலையில் எந்த விதமான பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. சிலை பாதுகாப்பாக இருக்கிறது என்று பதில் அளித்து இருந்தது.
இந்த நிலையில் நவபாஷாண சிலையை பரிசோதித்து பார்க்க குழு அமைக்க கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஹைகோர்ட்டில் பழனி கோயில் நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications