ஹிஜாப் அணியக்கூடாது.. அரசு மருத்துவருக்கு மிரட்டல்.. திருப்பூண்டி பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை
நாகப்பட்டினம்: திருப்பூண்டியில் அரசு மருத்துவர் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய பாஜக மாவட்ட நிர்வாகியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வழக்கமாக பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறும். கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியில் இருந்தபோது பள்ளி கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் கைகளில் கயிறு, நெற்றியில் விபூதி போன்ற மத அடையாளங்களுடன் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஹிஜாப் அணிந்துக்கொண்டு கல்வி நிலையங்களுக்கு செல்வதை பாஜக தடை செய்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இஸ்லாமிய அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் விமர்சனம் செய்திருந்தனர். இதை எதிர்த்து நீதிமன்றங்களையும் அவர்கள் நாடியிருந்தனர். இருப்பினும் பாஜக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்நிலையில்தான் தமிழ்நாட்டிலும் இந்த பிரச்னை தற்போது லைட்டாக தலைத்தூக்க தொடங்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்திருக்கிறது. இந்நிலையில் அங்கு வந்த பாஜக மாவட்ட நிர்வாகி புவனேஷ்வர் ராம் என்பவர் பணியிலிருந்த அரசு மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்ததை பார்த்து சர்ச்சையில் ஈடுபட தொடங்கியுள்ளார். ஹிஜாபை கழற்றுமாறு கூறி மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்திருக்கிறார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் அக்கம் பக்கத்தில் தெரிய வந்த நிலையில், உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, விசிக போன்ற கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட தொடங்கின. இது குறித்து போராட்டம் நடத்திய கட்சியினர் கூறுகையில், "நாகப்பட்டின மாவட்டத்தில் காலங்காலமாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பாஜக நிர்வாகி செயல்பட்டிருக்கிறார்.

இது உத்தரப் பிரதேசமோ, கர்நாடகாவோ அல்ல. இது தமிழ்நாடு. இங்கு இது போன்ற மத பிரிவினைவாத செயல்கள் எதுவும் எடுபடாது" என்று கூறியுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராமை பிடிக்க உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்துள்ளனர்.
கர்நாடகாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஹிஜாப் அணியக்கூடாது என்று பாஜகவினர் பஞ்சாயத்தை கூட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications