திருப்பூரில் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக போலீஸ்காரர்கள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை!
போலீஸ்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூர்: போலீஸ்காரர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருப்பூரில் ஆயுதப்படை போலீஸ்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தையை பார்க்க செல்லக்கூட விடுமுறை தராமல் அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்தவர் மோகன் 30. திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீசில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 5 மாதத்தில் குழந்தை உள்ளது. ஆனால் மனைவியும் குழந்தையும் பெற்றோருடன் இருக்க, மோகன் மட்டும் திருப்பூரில் அறை எடுத்து தங்கி வேலைபார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், வஞ்சிபாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டபாளத்தில் ஆண்பிணம் ஒன்று கிடப்பதை கண்ட ரயில்வே போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இறந்தவர் குறித்த விசாரணை நடத்தியதில், அவர் காவலர் மோகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலை மீட்ட போலீசார், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீண்ட நாட்களாக மோகனுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்றும், பிறந்த குழந்தையை சென்று பார்க்கக்கூடிய முடியாமல் போய்விட்டதால் கடும் மன உளைச்சலில் மோகன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எப்போது விடுமுறை கேட்டாலும் உயர் அதிகாரிகள் தர மறுத்துள்ளதுடன், வேறு பணிகளையும் கொடுத்து டார்ச்சர் செய்துள்ளதால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அனுப்பர்பாளையம் போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் தற்கொலை குறித்த உண்மை நிலவரங்களை அறிய தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications