தமிழகத்தில் மதுவிலக்கு அமலாகும் வரை போராட்டமும் ஓயாது.. விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை : மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், மதுவிலக்கு அமலுக்கு வரும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சந்தித்த பின்னர் விஜயகாந்த் தெரிவித்தார்.
மக்களவையில் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணா சாலை தர்கா அருகே இன்று (5-08-2015) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இளங்கோவன், குமரிஅனந்தன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து, புதுப்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில், மதுவிலக்கை வலியுறுத்தி சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்த மாற்றுத் திறனாளிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அங்கிருந்து புதுப்பேட்டை சமூக நலக்கூடத்துக்கு வந்த விஜயகாந்த், இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ‘‘காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ளது.
மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு அமலுக்கு வரும் வரை எங்களின் போராட்டம் ஓயாது'' என்றார்.
காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்ததை அக்கட்சியுடனான கூட்டணிக்கு அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாமா? என செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல. எல்லாவற்றையும் உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்'' என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications