வைட்டமின் எம்-ஐ கண்ணிலேயே காட்டலையே... வளர்மதி தோல்விக்கு காரணங்கள் பலபல!
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதியின் தோல்வி, சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், வளர்மதி உட்பட பலருக்கு ஏற்கனவே அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் முக்கிய பெண் அமைச்சராக வலம் வந்தவர் வளர்மதி. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி மூலம் சட்டசபைக்குள் நுழைந்த அவர், அடிக்கடி மீடியாக்களில் அடிபட்டு முக்கியமானவராக வலம் வந்தார்.
அவரது கோப முகம், அழுகை, சிரிப்பு என விதவிதமான புகைப்படங்களில் ஊடகங்களில் வெளியாகின. இதனால் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்த வளர்மதிக்கு அவரது சொந்தத் தொகுதிக்குள் செல்வாக்கு சரிந்து வந்துள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் வளர்மதி.

வைரல் போட்டோ...
ஆனால், தலைமை ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என வளர்மதிக்கு கட்டளை இட்டுவிட, தன் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்தே களத்தில் இறங்கியுள்ளார் வளர்மதி. ஆனபோதும், குழந்தையை குளிப்பாட்டுவது உள்ளிட்ட வித்தியாசமான புகைப்படங்களால் அவரது பிரச்சாரம் ஊடகங்களில் மட்டுமல்லாது, சமூகவலைதளங்களிலும் பேசப்பட்டது.

திமுக வேட்பாளர்...
ஆனால், திமுக சார்பில் வளர்மதிக்கு எதிராக கு.க.செல்வம் களமிறக்கப்பட்டார். அமைச்சராக இருந்தும் தனது தொகுதியில் கட்சியினருக்கு வளர்மதி எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செல்வம், தொகுதிக்குள் வளர்மதி மீதான அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

டோக்கன்...
அதோடு தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை உரிய விதத்தில் கவனிக்கவும் வளர்மதி தவறி விட்டார் எனக் கூறப்படுகிறது. எப்படியும் தோற்று விடுவோம் என்ற அவநம்பிக்கையில் இருந்ததால், ஜெயிக்க வைத்தால் கவனிக்கிறேன் என தொகுதி மக்களுக்கு டோக்கன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதிருப்தி...
இதுவும் வளர்மதிக்கு எதிரான அதிருப்தியாக மாறியது. இவ்வாறு அடுக்கடுக்கான அதிருப்திகளின் பலனாக, மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் வெற்றியைப் பறி கொடுத்துள்ளார் வளர்மதி.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications