மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரிந்துரைப்படி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோது அவருக்கு ஆயுதம் ஏந்திய 10 போலீசார் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர் இப்போது எந்த பொறுப்பிலும் இல்லை, மேலும், திமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுவிட்டார்.

இந்த நிலையில், பாதுகாப்பு வழங்குவது தேவையற்ற செலவீனம் என கருதிய மத்திய அரசு, பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது. இருப்பினும், அழகிரிக்கு முன்னாள் அமைச்சர் என்ற வகையில் ஆயுதத்துடன் கூடிய ஒரு போலீஸ்காரர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளார்.
அழகிரி பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக ஒரு தகவல் வெளியாகியிருந்த நிலையில், மத்திய அரசோ, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications