சொத்துக்காக தந்தையை கடத்தி தாக்கிய மகன்.. தப்பி வந்து போலீஸில் பரபர புகார்
சொத்துக்காக தன்னை கடத்தி சென்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க தந்தை புகாரளித்துள்ளார்.
ஈரோடு: சொத்துக்காக கடத்தி சென்று ஆவணங்களில் கையெழுத்து பெற்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பக்கீர் முகம்மது. ஊதுபத்தி வியாபாரியான இவரது மனைவி நாகூர் அம்மாள். இவர்களுக்கு சாகுல்அமீது , அப்பாஸ் என இரு மகன்கள் உள்ளனர். பக்கீர் முகம்மதுவுக்கும் அவரது மூத்த மகன் சாகுல் அமீதுக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி கருங்கல்பாளையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை அவரது மகன் காரில் கடத்தி சென்று தாக்கியுள்ளார். மேலும் நண்பர்கள் உதவியுடன் சொத்து ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மகனிடமிருந்து தப்பி வந்த பக்கீர்அகமது ஈரோடு எஸ்பி சக்திகணேசை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தன்னை கடத்தி சென்று தாக்கி ஆவணங்களில் கையெழுத்து பெற்ற மகன் சாகுல் அமீது மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். சொத்துக்காக தந்தையை கடத்திய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications